Thursday, 30 July 2015

செய்வினை மற்றும் பில்லி சூனியம் பற்றிய விளக்கங்கள்

செய்வினை மற்றும் பில்லி சூனியம் பற்றிய விளக்கங்கள்- பாகம் 2



இந்த செய்வினை அல்லது இடு மருந்து கொடுப்பது என்பது பல கால காலமாய் இருந்து வருவது உண்டு. மேலும் தமிழகத்தில் ஒரு கிராமம் முற்றிலுமே இந்த தொழிலை செய்து வருவது பலருக்கு தெரிந்திருக்கும்.எதிரிக்கு வாரிசு இல்லாமல் போக, தொழிலில் நஷ்டம் வர, அடியோடு மாரணம் செய்ய,ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், கணவன் மனைவியை சேர்க்க பிரிக்க, காதலர்களை சேர்க்க பிரிக்க  என பல எதிர்மறை விஷயங்களுக்கு இவை பிரதானமாக பயன்படுகிறது . பல் வேறு வகை மூலிகைகளையும் இவற்றுக்கு பயன்படுத்தலாம். உதாரணமாக பின்துடரி , ஆடை ஒட்டி, வெல்லாடனை    போன்றவை மிக அதீத உடல் நசிவை தரக்கூடிய, செய்வினை பிரயோகங்களில்  உபயோகப்படுத்தும் மூலிகைகள். ஆங்கிலத்தில்  இவைகளை ' டாக்சிக் ஹெர்பல்ஸ்' என்பர். எவற்றை செய்தாலும் நஷ்டம், எதிலும்  தோல்வி, எவ்வளவு புத்திசாலிதனத்துடன் செய்தாலும் தோல்வி, எந்த கோவில் குளம் சென்று வந்தும் பலன் இல்லாத தன்மை, திடீர் என கடன் எனும் பெரும் குழியில் மாட்டி  கொள்வது போன்றவை தொழில் நசிவை மற்றும் அழிவை தருவதற்காக எதிரிகளுக்கு  செய்யப்படும் ஸ்தம்பன மற்றும் கொடிய ஆக்ரூஷன நிலைகள். பேய்மிரட்டி, நத்தை சூரி, தலைச்சுருள் , ஆதிக்கொடி, காட்டாடி, செந்தாளி போன்ற சிலவற்றை ஆக்ரூஷன மந்திர கட்டுகள் கட்டி காற்றில் வெளியிட்டால் அணைத்து நாச வேலைகளையும் செய்யும் . இது பற்றி மேலை நாட்டு ஆய்வுகள் பல ஆங்கிலத்தில்  உண்டு,  முக்கியமாக 'சிஷோபிரிநியா' எனப்படும் ஒரு வகையான மூளை  தொந்திரவு அனேகமாக இதில் சிக்கி  கொண்ட பலருக்கு  ஏற்பட்டு இருப்பதை கண்டு  வருகிறோம். ஆய்வுகளின் முடிவுகளும் மேற்கண்ட நோய் மற்றும் வயிறு மற்றும் சுவாச கோளாறுகள் மற்றும் கால் முட்டிகளில் கோளாறு போன்றவை பிரதானமாய்  ஏற்படுவதாக  தெரிவிக்கிறது. அடுத்ததாக இவை காலடி மண், நகம், உடுத்திய துணி போன்றவற்றை வைத்தும்   செய்யப்படுவது உண்டு-முக்கியமாக ஆண் பெண் சம்பந்தப்பட்ட அணைத்து விஷயங்களும் இம்முறையில் செய்யப்படுகிறது.ஆகையால் தான் வெட்டிய நகத்தை கீழே போடக்கூடாது, மற்றும் முடி உதிரக்கூடாது அப்படியே உதிர்ந்தாலும் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வெளியே சென்று வந்தால் கண்டிப்பாக கால்களை அலம்ப வேண்டும் எனவும் நம் முன்னோர்கள்  கூறி வைத்தனர். தற்போது இவற்றை இளைய சமுதாயம் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மலையாள மாந்த்ரீக முறைகளில் கடைபிடிக்கப்படும் யட்சிணி அல்லது சாத்தன் முறைகளில் நறுமண புகைகளின் மூலம் அவற்றை வசீகரித்து தேவைப்பட்ட மாந்த்ரீக காரியங்கள் சாதிக்கப்படுகின்றன . இதில் பல அதீத நுட்பங்களும் சூட்சுமங்களும் உண்டு. உதாரணமாக மரிகொளுந்து, சம்பங்கி  போன்றவற்றை பரவ விடும் பொழுது  அஷ்ட கர்மங்களில் ஒன்றான  வசியம் எற்படுத்தபடுகிறது. ஆக்ரூஷனம், உச்சாடனம் மற்றும் வித்வேஷனங்கள் செய்ய சாம்பிராணியுடன்,குங்கிலியம் மற்றும் மிளகாய்  சேர்த்து எரிக்கப்படுகிறது. தேவ கணங்களை வசீகரிக்க அரசன் குச்சிகள் எரிக்கப்படுகிறது. முக்கியமாக முதலில்  எந்த முறைப்படி பாதிக்கப்பட்ட நபர் கட்டுண்டு உள்ளார் என்பதை அறிய முற்பட்டு பின்பு எத்தனை காலமாய் பாதிக்கப்பட்டுள்ளார் என அறிந்து, அவரின் புற ஒளி தோற்றம் எதை குறிப்பிடுகிறது , உடலில் உள்ள சக்கரங்களின் நிலை  எவ்வாறு உள்ளது என பார்த்து அதற்கேற்றவாறு தீர்வு கொடுப்பது சிறந்ததாக இருக்கும். மனித உடலில் மஹா சக்தியான தனஞ்செயன் எனப்படுகிற
(தச வாயுவில் ஒன்று) காற்றின் சக்தி ஒளியை வெளிப்படுத்துகிறது. இறந்த உடலை அழித்து  மண்ணோடு கலக்கும் பொழுது வெளிவருவதும் இந்த தனஞ்செயன் என்கிற காற்று தான்  என்கிறார் திருமூலர்.  தனஞ்செயன் தவிர மற்ற ஒன்பது வாயுக்களும் நம் உடலின் ஒன்பது நாடிகளுக்குள் சென்று செயலாற்றுகிறது,எதிர்மறை சக்திகள் மற்றும் ஏவல் போன்றவை நம் உடலில் மட்டும் இல்லாமல் நம் வசிப்பிடம் மற்றும் வசிப்பிடத்தில்  உள்ள பழைய பொருட்கள், ஓடாத கடிகாரம், உபயோகமற்ற சாமான்கள் மற்றும் நாற்காலிகள் போன்றவற்றிலும்  படிந்திருப்பதை கண்டுள்ளோம். இதுவும் பெரியோர்கள் முன்பே  சொல்லி வைத்த விஷயம் தான். பழையன கழித்தல் அவசியம் இருப்பின், புதியன நல்லன புகும் என்று.

மிகவும் கூட்டமான நெரிசல்களில் அடிக்கடி பயணம் செய்வோர், ரயில் மற்றும் கூட்டமான பேருந்தில் பயணம் செய்வோர், மருத்துவமனை, தியேட்டர்  போன்றவற்றில் வேலை செய்வோர்களுக்கு 'Accidental Energy Transfer' எனப்படும் "தற்செயலாக உண்டாகும் எதிர்மறை சக்தியின்' பாதிப்புக்கள் இருக்கும்-பெரிய பாதிப்புக்கள் இல்லாவிட்டாலும் இனம் தெரியாத பயம்,மனச்சோர்வு, உடல் சோர்வு போன்றவை இவர்களை வாட்டி வரும். இவர்கள் அடிக்கடி 'ராக் சால்ட்' குளியல் செய்து வருவது அவசியம்.

நம் அனுபவத்தில் இவற்றை  எல்லாம் வரும் முன் காத்து கொள்வது தான் சிறந்ததாக தெரிகிறது.
இடு மருந்து பாதிப்பு இருப்பதாய் தோன்றினால் காலையில் வெறும் வயிற்றில் சூடான சாதத்துடன் வெள்ளை  பூசணியை சேர்த்து குழைய வேகவைத்து  உப்பு காரம் எதுவும் சேர்க்காமல் உண்டு பார்க்கலாம். பாதிப்புகள் இருப்பின் வாந்தி வந்து வெளியேறும்-ஆனால் இது மிகவும் சாதாரண முறை தான்.குறிப்பிட்ட நபரை நேரில் கண்டு விவரங்கள் அறிந்தால் மட்டுமே எவரும் முழு நிவாரணம் கொடுக்க இயலும். 

இதில் ஆட்பட்டு துன்பப்படுவோரும் மேலும் இதற்கு ஆட்படாமல் முன் கூட்டியே தற்காத்து கொள்ள எம்மிடம் வருவோரும் உண்டு.இதனால் பாதிப்புக்கள் இருப்பின் நிவாரணம் பெற 'ருத்ர பரிஹார் ரக்க்ஷா  சென்டர்' +919840130156 அணுகலாம். குறிப்பிட்ட சில மூலிகைகள் மூலம் நிவாரணம் அடையலாம்.

பேய் ஆவி போன்றவற்றை விரட்டும் மூலிகைகள் முறைகள் பற்றிய தகவல்களுடன் அடுத்த  பாகத்தில்  முற்றும்...



http://mantraayantraa.blogspot.in/

செய்வினை மற்றும் பில்லி சூனியம் பற்றிய விளக்கங்கள்-பாகம் 1

நம்  வேந்தர்  தொலைகாட்சி  பேட்டியை  அடுத்து  நேரில்  ஆலோசனைக்கு வந்தவர்களில்  90 சதவீதத்தினர் மேற்கண்ட செய்வினை ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அல்லது  பாதிகப்பட்டதாக மன  ரீதியான பயத்தால் வந்தவர்களே. இதை பற்றிய பல கால ஆய்வுகளுக்கு பின்  இவற்றை அறிவியல் ரீதியாகவும் நிச்சயமாக நிரூபிக்கமுடியும்  என்பதே எம் கருத்து. அப்படி முடிகிற விடயங்கள் மட்டுமே போலிகளை உடைத்து உண்மைகளை மட்டும் நிறுத்தி நீண்ட காலங்கள் நிலைத்து நிற்கும். சில ஜோதிட நண்பர்கள் இவைகளை ஜாதக ரீதியாக கால நேரத்திற்கு உட்பட்டால்  மட்டுமே செய்வினை செய்ய  முடியும் என கூறி வருவதுண்டு. எம் அனுபவத்தில் அப்படி இல்லாமலும்  அதாவது கால நேரத்திற்கு அப்பாற்பட்டும் இவைகளுக்கு ஆட்பட்டு   துன்பபடுவோர் பலர் இருப்பதை அனுபவ ரீதியாக பார்த்து வருகிறோம். இதில் மன ரீதியாக சில ஆன்மீக நபர்களால் தவறாக கூறப்பட்டு பயத்தில்  பல காலங்கள் மன ரீதியாக துன்பப்பட்டு வருபர்களும் அதிகம். விஷ போஜனம் என கூறப்படும் இடுமருந்து கொடுத்து செய்வினையால் ஆட்படுபவர்களுக்கு சிலர் சில பச்சிலை மருந்து கொடுத்து வாந்தி எடுக்க செய்து பின்பு செய்வினை விலகி விட்டது என கூறி அனுப்பிவிடுகின்றனர். மன ரீதியாக துன்பத்தில் இருப்போருக்கு  மட்டுமே இது நன்மை செய்யும். உண்மையில் கடுமையான இடு மருந்து பாதிப்பில்  உள்ளோருக்கு இவை வேலை செய்யாது. பல வருடங்கள் உள்ளே ஊறிய விஷத்தை, உடல் உறுப்புகள் அனைத்திலும் பரவிய ஒன்றை ஓரிரு நாட்களில் அல்லது சில மாதங்களில் எடுத்து விட முடியாது.இருந்தும் எம்மிடம் வருவோர் பலருக்கு உடனடி நிவாரணம் கிடைத்து வருவதற்கு காரணம், இவர்களுக்கு  எதிரிகளால் கொடுக்கப்பட்ட மருந்தின் வீரியமின்மை மட்டுமே. இது போன்ற பாதிப்புகளை நம் மகரிஷிகள்  மற்றும் சித்தர்கள் பல காலம் முன்பே பல் வேறு வகைளில் பிரித்து நமக்கு அருளி சென்றுள்ளனர். நல்ல வேலையாக அதில் பல மூலிகைகள் தற்சமயம் கிடைப்பதில்லை. ஆகையால் அவ்வளவு வீரியமான
மருந்தும்  பல காலம் தங்கி அழிக்கும் செய்வினை  செய்யும் மாந்த்ரீக நபர்கள் தற்காலத்தில் வெகு குறைவு. இவற்றில் மூலிகைகளின் மூலம் கொடுப்பது, யட்சிணி மற்றும் குட்டி சாத்தன் மூலம் செய்யும் கேரளா முறைகள், அரேபிய முறைகள் என பல் வேறு வகைகள் உள்ளன. அடுத்த பாகம் மேலும் பல தகவல்களையும் இதை பற்றிய நல்ல தெளிவான பார்வையையும் உங்களுக்கு கொடுக்கும். முடிக்குமுன் ஒரு பரிகார முறை..

பில்லி நீங்க : காட்டு சீரக இலைகளை சாறெடுத்து  பாதிக்கப்பட்டவரின் உடல் முழுதும் தடவ வெகு சில நாட்களில் பாதிகப்பட்டவரின் உடல் எரிச்சல், கண் வீக்கம், சொறி சிரங்கு மற்றும் வேறு உபாதைகள் குணமாகி நலம் பெறுவர்.
http://mantraayantraa.blogspot.in/
மற்றவை அடுத்த பாகத்தில்.. 

No comments:

Post a Comment